" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் போடி மெட்டு காட்டுத்தீயில் சிக்கி பாட்டி, பேத்தி, 3 பேர் பலி, 6 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் ராசிபுரம் சேர்ந்த ஜெயப்பிரியா, பத்திர மணி, கார்த்திகா, லோகேஷ், மஞ்சுளா, ஒன்டிவீரன், கல்பனா, என்று சுமார் 9பேர் போடி அருகே கேரளா எல்லை அருகே உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.
நேற்று மாலை வேலை செய்து ஊர் திரும்ப தொடங்கினர்.
போடிமெட்டில் கொரோனா வைரஸ் சோதனை செய்வதில் தாமதம் என்பதாலும் ,144 தடை உத்தரவு என்பதனாலும் போக்குவரத்து பேருந்து நிறுத்தப்படும் காரணத்தை ஒட்டி மலைப் பகுதியான குறுக்கு மலைப்பாதை வழியில் நடைபாதையில் வரத்தொடங்கினர்.
மலைப்பகுதி வந்து கொண்டிருக்கும் பொழுது காட்டுத்தீ சுற்றிலும் சூழல் தொடங்கியது.
சம்பவ இடத்திலேயே உடல் கருகி 3 பேர் இறந்தனர் மற்றவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர் அனைவரும் முதலுதவி செய்து தேனி மாவட்ட மருத்துவ கல்லூரியில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்துள்ளனர்.